Thursday, November 15, 2007

தலைப்பில்லை

திடீரென்று உதயமான தத்துவங்கள். வள்ளுவன், ஒளவை சொன்ன தத்துவங்கள் வேறு வடிவில்......

உள்ளத்தில் உள்ள வலியை,
உதட்டில் இறக்கி,
உதடை காதுவரை இளி....
உள்ள வலி,
உதடு வழி இறங்கும்...




கண் உறங்கும் முன்,
கற்க ஏதாவது ஒன்றை தேடி,
கட்டிலில் புரண்டாலும்,
கட்டுரைகளை கரைத்து குடித்தாலும்,
கவிதைகளை, அதை எழுதிய
கவிஞனை விட ரசித்தாலும்,
கற்ற ஒன்று உரைக்கிறது,
கல்லாதது கடலளவு.