Wednesday, March 14, 2007

ஒரு தாயின் வருத்தம் !!!

ஒரு தாயின் வருத்தம் !!!

உன் உயிர் வளர்க்க, உன்னுள் தாய்பற்றை வளர்க்க,
என் ரத்தத்தை பாலாக ஊட்டினேன்.

மற்ற மொழிகளை எளிதில் கற்க, உன்னுள் தாய்மொழிபற்றை வளர்க்க,
தாய்மொழியாம், தமிழை ஊட்டினேன்.

வாழ்வின் நெறியை உணர வைக்க, உன்னுள் ஆன்மிகத்தை வளர்க்க,
விவேகானந்தரின் ஆன்மிகத்தை ஊட்டினேன்.

அநியாயத்தை கண்டு கொந்தளிக்க, உன்னை காத்து கொள்ள,
என்னவனின் வீரத்தை ஊட்டினேன்.ஆனால்,

அயல் நாட்டு மோகம் கொண்டு, அங்கு வேலை செய்ய,
உனக்கு எதையும் ஊட்டவில்லையேடா???

கவிஞர்களெல்லாம் கவிஞர்களில்லை!!!

கம்பர், ஷெல்லி,
கண்ணதாசன், வைரமுத்து,
இவர்களெல்லாம் கவிஞர்களே இல்லை...


உன்னை வர்ணித்து,
கவிதை எழுதாத வரை !!!