Friday, July 13, 2007

ரசித்த திரைப்பாடல் வரிகள்

சமீபத்தில் நான் ரசித்த சில பாடல் வரிகளை பற்றி இந்த பதிவில் எழுத முடிவு செய்துள்ளேன். கவிஞர்கள் ஒன்று நினைத்து பாடல் எழுதி இருக்கலாம். நான் அதை வேறு மாதிரி உருவகப்படுத்தி இருக்கலாம். பதிவை படித்து என் ரசனையை பற்றி பின்னூட்டமிடுங்கள்.

நட்பு:

படம் - சென்னை - 600 028.
பாடல் - யாரோ???

ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல் கொண்டு வாழ்கின்றோம்...
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்ய கூடாது...
நண்பா வா!


என்னை பொறுத்த வரை, காமம் இல்லாத காதல் நட்பு ஆகும். காமம் உள்ள நட்பே காதல் ஆகும். எதையும் எதிர்பாராமல் வரும் நட்பு காதலை விட சிறந்ததே....

காதல்:

படம் - சத்தம் போடாதே.
பாடல் - ஓ... இந்த காதல் என்ற பூதம்


உணவுகள் பிடிக்கலை. கனவுகள் பிடிக்குது.
காதலின் போதைக்கு அளவு இல்லை.
நண்பர்கள் பிடிக்கலை. நாய்க்குட்டி பிடிக்குது.
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை.

காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே....
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே ...

நஞ்சென்றால் ஒரு முறை கொல்லுமடி,
நினைவுகளோ பல முறை கொல்லுதடி....

ஒருவனுக்கு காதல் வந்த பின்னர் உலகின் மிக சிறந்த அழகானவனாக தெரிவான். அந்த காதல் முறிந்தால் உலகிலேயே மிக அசிங்கமானவனாக தோற்றம் அளிப்பான். காதலுக்கு அந்த சக்தி உண்டு. காதல் தோல்வி தரும் வலியை விட, காதலியின் நினைவுகள் தரும் வலி அதிகமானது என்று சொல்லியதால் மிகவும் ரசித்தேன்.

ஆன்மிகம்:

படம்: புதுப்பேட்டை.
பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை...

உனக்கும் இல்லை.... இது எனக்கும் இல்லை..
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்.
நல்லவன் யார்? அட கெட்டவன் யார்?
கடைசியில் அவனே முடிவு செய்வான்....

1000 தடவை இந்த பாடலை கேட்டு இருப்பேன். கீதையின் கருத்தை வேறு விதத்தில் சொன்ன பாடல். மற்றவன் சொன்னான் என்பதற்காக உன் வாழ்க்கைப்பாதையை மாற்றாதே... உனக்கு சரி என்று பட்டதை செய். ஏனென்றால் கடவுளுக்கு மட்டுமே தெரியும், நீ நல்லவனா, கெட்டவனா என்று.


காமம்:

படம்: பெரியார்.
பாடல்: இடை தடவிக்கொள்ள...


நிலா விழும் வரை,
நீயாய் விடும் வரை,
இவள் உனது அடிமைதானே....

ஆண் சாதியும் பெண் சாதியும்,
இருக்கும் வரை
இருக்கும் எங்கள் இனம் !!!


காம வெறி பிடித்து அலையும் ஆண் இருக்கும் வரை விபச்சார தொழில் ஒழியாது என்பதை மறைமுகமாக சொன்னது போல் தோன்றுகிறது.


தத்துவம்:

படம்: உன்னாலே... உன்னாலே...
பாடல்: ஜூன் போனால்....

மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் உன் கூத்துக்காத்தான்....

சிறை இருக்கும் மனங்களை பறவை செய்...


மற்றவன் ஆடுவதை நீ பார்ககாதே... உன் ஆட்டத்தை நீ ஆடு.... இந்த உலகமே திரும்பி பார்க்கும். "வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்று சொன்னான் வள்ளுவன். மனதை கட்டுப்படுத்தி, எண்ணங்களை சுருக்கி, உன்னை நீயே அடக்கி வைக்காதே என்று சொல்லி இருப்பாரோ கவிஞர்??

- சகலத்தையும் ரசிக்கும் சாதரண ரசிகன்.

5 comments:

Raz said...

நட்பு:

nanpukum karpu undu parada!
i totally agree with u, kammam irukum nanpu kadhal agukirathu!

காதல்:
vali tharum sugam athu!

ஆன்மிகம்:
sami intha vilaiyatuku nan varala

காமம்:
right! men have to change

தத்துவம்:
ennakum antha vari than romba pudichathu

I got this sms today:
pirintha kadhalarkal meet pannal- verum kanner than
pirintha nanbarkal meet pannal- beer, quarter, chicken biriyani n fliter :D

சகலத்தையும் ரசிக்கும் சாதரண ரசிகன - this is wht i liked the best !


FIRST TO COMMENT :D

Raz said...

ammam, online than iruken

Raz said...

1. enga puniyathula nalla than ellarum irupanga

2. yes i am online

3. my name is not raz

Rama said...

@@sami intha vilaiyatuku nan varala... @@

Anaithum therinthavan, paesa maattaan... Anaithum ariyaathavaan paesaamal irukka maattaan...

Naan paesaamal irukka maattaen.. Nee aanmigathai pathi paesa maattaen engiraai.... :-))


@@ I got this sms today:
pirintha kadhalarkal meet pannal- verum kanner than
pirintha nanbarkal meet pannal- beer, quarter, chicken biriyani n fliter :D @@

This is simply true....

@@"சகலத்தையும் ரசிக்கும் சாதரண ரசிகன - this is wht i liked the best !

FIRST TO COMMENT :D " @@

Mikka nandri.... :-)

யாத்ரீகன் said...

பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை...

இந்த பாடலின் மொத்த பாடல் வரிகளும் உள்ளனவா உங்களிடம் ?