Monday, August 27, 2007

எனது விழிகள் !!

அநாயசமான வளைவை அழகாய் ரசித்து
அளந்து பார்த்தன எனது விழிகள் !!
தாய்மைக்கு அடையாளமாய் இறை தந்த
தனத்தை தரிசித்தன எனது விழிகள் !!
கண் காண வேண்டிய கண்களை தவிர
கண்டதையும் கண்டன எனது விழிகள் !!
பண்ணிய பாவத்திற்காக கடைசியாக மின்னல்-ஒளி
பார்த்து மடிந்தன எனது விழிகள் !!

2 comments:

prem said...

நல்ல பதிவு.. தினமும் நிகழும் ஒரு உனர்வின் மீதான பார்வை. இந்த எண்ணம் இயற்க்கை ஆனதல்லவா... முதலில் தோன்றிய காமமும், பிறகு தோன்றிய தெளிவும்.. நண்பரே.. அதற்கு இதனை பெரிய தண்டனையா??

Rama said...

கருத்துக்கு நன்றி நண்பரே!!!

சில பெண்கள் இப்படி பார்க்கும் ஆண்கள் கண்ணில் கொள்ளிக்கட்டையை வைக்கணும் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு நான் கற்பனையில் கொடுத்த தண்டனை தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

மேலும், ரோஜாவிற்கு பாதிப்பு வராமல் ரசிப்பது தவறு இல்லை, என்பவன் நான்.