Friday, October 19, 2007

ஓர் இரவு ஆசை.

மெரினா கடற்கரையில்,
என் காதலியின் மடியாம் கடற்மண்ணில் தலைசாய்த்து படுத்து,
அவளின் சிணுங்கல் சத்தமாம், அலைச்சத்தம் கேட்டு ரசித்து,
அவளின் பால்முகமாம், கரைபடிந்த நிலவின் முகம் பார்த்து,
அவளின் மூக்குத்தியின் மினுமினுப்பாம், நட்சத்திரத்தின் கண்ணடிப்பு கண்டு,
அவளின் வாசமாம், மீன் - கவிச்சை வாடையை நுகர்ந்து,
என்னை மறந்து கடல் மைந்தனாகும் வேண்டும் ஓர் இரவு மட்டும்........

No comments: