Wednesday, January 9, 2008

ஆண்டு 2008 யிடம் கேட்கிறேன்...

முந்தைய பதிவில், 2007 க்கு ஒரு பிரியா விடை கொடுத்தாச்சு. 2008 க்கு ஒரு வரவேற்பு கொடுக்கவே, இந்த பதிவு...

புதிதாய் பூத்த புத்தாண்டே !

அர்த்தமற்ற பதிவு ஆயிரத்தெட்டு கேட்கவில்லை...
அழகான, அபூர்வமான பதிவு ஒன்று கேட்கிறேன்...

வெடிகுண்டு சத்தமில்லா அமைதி கேட்கவில்லை...
உயிர், உடல், பூமி சேதமில்லா வாணவேடிக்கை கேட்கிறேன்...

நோய் நொடி இல்லா உடல் ஆரோக்கியம் கேட்கவில்லை...
உடல் இளைத்தாலும், உழைக்கும் மன உறுதி கேட்கிறேன்...

அழுது வழியும், வேலை கெடுக்கும் சீரியல் கேட்கவில்லை...
அர்த்தமுள்ள, நினைத்தாலே இனிக்கும், ரசிக்கும்படியான நாடகம் கேட்கிறேன்...

அழகான பெண்கள் மட்டும் கண்ணில் படும்படி கேட்கவில்லை....
அழகானவர்கள் காதலிகளாகவும், அறிவானவர்கள் நண்பர்களாவும் கேட்கிறேன்...

அறிவுரை கூறும், தன்னிலை விளக்கும், திரைப்பட கதாநாயர்கள் கேட்கவில்லை....
சுயமாய் யோசிக்க வைக்கும், கதையுள்ள திரைப்படங்களை கேட்கிறேன்....

எந்த போட்டியிலும் தோற்காத விளையாட்டு அணி கேட்கவில்லை...
ஜெயித்தாலும், தோற்றாலும், மாறாத மக்கள் மனம் கேட்கிறேன்...

கேட்டதையெல்லாம் கொடுக்க இறையருள் கேட்கவில்லை...
கேட்டது கிட்டாவிடினும் புன்னகைக்கும் மனம் கேட்கிறேன்....

2 comments:

Unknown said...

ஹ ஹ ஹ...மிகவும் அருமையாக வார்த்தைகளில் பின்னல் செய்கிறிர்கள். உங்களை போல் எனக்கு வார்த்தையின் பின்னல்கள் தெரியாது. நான் இன்னும் உங்கள் கட்டுரைகளை படிக்க வில்லை.கவிதைகளை மட்டும் படித்தேன்.உங்கள் கட்டுரைகளை படித்த பின் பின்னூட்டம் எழுதுகிறேன்.......

Rama said...

நன்றி Sharel!!! மிக்க நன்றி...

உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பின்னூட்டத்தில், "மறு மொழியின்றி மௌனம் புரிந்தேன்....." என்பதிலும் தமிழ் வார்த்தைகளின் பின்னல்கள் நன்றாகவே உள்ளது... வாழ்த்துக்கள்.