Friday, January 18, 2008

பொறுத்தார் காதலில் வெல்வார்....

கண் திறக்க முடியாமல் தவித்தான். கண் இமையில் யாரோ ஏதோ செய்வது போல் உணர்ந்தான். இப்பொழுது எல்லாம் தெளிவாக தெரிந்தது. இது அவனுக்கு புதிய இடமாக இருந்தது. அவனுக்கு முன்னர் சில ஆண்களும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். வலப்புறம் நகர்ந்து பார்த்தான். நினைத்தபடி நகர்ந்தான் ஆனால் கால் நகராததை அவன் உணரவில்லை.
*********************************************************************

'கண்ணா!! எழுந்திரு!!' என்று கண்ணனின் அம்மா சொல்ல, கஷ்டப்பட்டு கண் விழித்தான் கண்ணன்.

'என்னம்மா?? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிறேன், அம்மா..' என்றான் போர்வையை இழுத்து போர்த்தியபடி...

'அப்பா கூட ஜாகிங் போ!!' என்று அவன் அம்மா சொல்ல, பீச் போகலாம் என்ற சந்தோஷத்துடன் எழுந்தான்.

'பத்து நிமிஷம்...' என்று சொல்லி பாத்ரூம் ஓடினான்.

சென்னை மெரீனா கடற்கரை....

'டேய் மச்சான், ரகு!!' என்று யாரோ சொல்ல கண்ணனின் தந்தை, ரகு திரும்பி பார்த்தார். அவரது கல்லூரி நண்பர், கார்த்திக் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் அவரது மகளும் நின்று கொண்டிருந்தாள். சிறுபுன்னகையுடன், கார்த்திக்கும், அவரது மகளும் கண்ணனையும் ரகுவையும் நோக்கி வந்தனர்.

'என்னடா தொப்பையை குறைக்க வந்தியா??'

'ஆமாடா... உன டாட்டரா?? உன்னை மாதிரி இல்லாமல் அழகாக இருக்கிறாள்..'

'உன் பையனா?? உன்னை மாதிரி தத்தியா?? இல்லை என்னை மாதிரியா??'

இவர்கள் பேச்சை கவனிக்காமல், கண்ணன் கார்த்திக்கின் மகளை நோக்கி கேட்டான்.
'உன் பெயர் என்ன?'
'ராதா'
***********************************************************
அந்த வரிசை எங்கு முடியுது, என்று எட்டி பார்த்தான். முடியும் இடத்தில் இருவர் கணினியுடன் உட்கார்ந்து இருந்தனர். இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். எந்த மொழி என்று அறிய முயற்சி செய்து தோற்றான். அவர்கள் பேசுவதை, அவர்களுக்கு எதிரில் நின்று கொண்டிருப்பவன் கேட்டு கொண்டிருந்தான். கேட்டு முடிந்தவுடன் விலகி சென்றான். இந்த மாதிரி அவன் எங்கும் பார்த்ததும், கேட்டதும் கிடையாது. பெருமூச்சு விட முயற்சி செய்தான். முடியவில்லை.
***********************************************************
'என் பெயர் கண்ணன். என்ன படிக்கிற??'
அவள் பதில் சொல்லும் முன் கார்த்திக், ராதாவை பார்த்து கேட்டான்.
'என்னம்மா, கிளம்புவோமா??'
'சரிடா.. நானும் கிளம்புறேன். ஒரு நாள் வீட்டுக்கு வா!! கல்லூரியில் பேசியபடி இவங்க ரெண்டு பேருக்கும், கல்யாணம் பண்ணி வச்சிரலாம்.' சிரித்து கொண்டே கார்த்திக் சொன்னான்.
'அதுக்கென்ன?? பண்ணிட்டா போச்சு... ' என்றான் ரகு.

இதை கேட்டவுடன் கண்ணன் வானத்தில் பறக்க ஆரம்பித்தான். ராதாவை பார்ப்பதற்காகவே தினமும், ரகுவுடன் ஜாகிங் வந்தான். பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டனர்.

'ப்ரெண்ட்ஷிப்ல நம்மள மிஞ்சிருவாங்க, போல..' என்று ரகு கார்த்திக்கிடம் சொன்னது கேட்டு, அவர்கள் அழகாய் சிரித்தனர்.

'நாளைக்கு, அன்பர் தினம்... உனக்கு ஒரு கிப்ட் கொடுப்பேன். கண்டிப்பாக வாங்கிக்கணும். சரியா??' என்றான் கண்ணன்.

'என்ன கிப்ட்??' என்று விழித்தாள், ராதா.

'சஷ்பென்ஸ்!!' என்றான் கண்ணன்.
**************************************************************************
அவன் ரொம்ப நேரம் நிற்பது போல உணர்ந்தான். ஆனால் கால் வலிக்க வில்லை. தூங்கலாம் என்று கண் மூடினான். தூக்கமும் வர வில்லை. அந்த இருவரை நெருங்க நெருங்க, அவனுக்கு பிடிக்காத ஒன்று இருப்பதை உணர்ந்தான். அதை பார்த்தாலே அவனது யார் பின்னாலாவது ஒளிந்து கொள்வான். இங்கு ஒளிந்து கொள்ள ஒன்றும் இல்லாததால், வேறு பக்கம் தன் பார்வையை திருப்பினான். யாரோ அவனை திருப்பியதால் அது இருக்கும் திசை நோக்கி திரும்பினான். அது அவன் மிக அருகாமையில் இருப்பது கண்டு அலறினான். ஆனால் அந்த அலறல் அவனுக்கே கேட்கவில்லை....
***************************************************************************
'அம்மா! அப்பாவுக்கு உடம்பு சரியில்லையினாலும் பரவாயில்லை, நான் மட்டும் ஜாகிங் போகிறேன்.' என்று அடம் பிடித்தான், கண்ணன்.
'நீ தனியாக போக வேண்டாம்..' என்று அரட்டினாள் அவனது அம்மா.
'நான் என்ன தனியாகவா போகிறேன்?? டிரைவர் கூடத்தானே போகிறேன்.. ப்ளீஷ்மா..' என்று கெஞ்சினான்.
'சரி... சரி... போ...' என்று அவன் அம்மா கூற, உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.

ராதாவுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுடன், காத்திருந்தான். அவர்கள் காரின் எண்ணை பார்த்தவுடன் அளப்பரிய ஆனந்தம் கொண்டான். அதிலிருந்து ராதா மட்டும் இறங்கி வருவதை கண்டு பரமானந்தம் அடைந்தான்.
'உன் அப்பா வரவில்லையா??' என்றான், கண்ணன்.
'அவருக்கு உடம்பு சரியில்லை...' என்றாள், சிறு மிரட்சியுடன்.
'இந்தா என் அன்பர் தின பரிசு..' என்று ஒரு டெட்டி பியரை கொடுத்தான்.

அதன் நெஞ்சில் 'I LOVE YOU' என்ற வாசகம் இருந்தது.
'....' அதை பார்த்து மூர்ச்சையானாள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தன் கார் இருக்கும் திசை நோக்கி ஓடினாள்.

இதை சற்றும் எதிர்பாராத கண்ணனின் மூளை, யோசிக்க தொடங்கியது. விஷயம் கார்த்திக்கிடம் செல்லும். கார்த்திக் மூலம் ரகு அறிவான். பெல்ட், அடி ஷ்கேல், கம்பு, என்று பல அடிக்கும் ஆயுதங்கள் அவன் கண் முன்னே தெரிய, கடல் நோக்கி ஓடினான்.

'அவனை பிடிடா... ' என்று யாரோ சொல்ல, ஈனஷ்வரத்தில் கேட்டது.

************************************************************

அவனை அலற வைத்த எருமை மாடு மிக அருகாமையில் நின்றது.. ஒருவன் வந்து அவன் காதை தொட்டு செல்ல, அவர்கள் இருவரும் பேசுவது கேட்க ஆரம்பித்தது.
'பெயர்'
'கண்ணன்'
'விதி'
'முதன் முதலில் யாரிடம் காதலை சொல்கிறானோ, அவர்களுடன் ஆயுள் முழுக்க சேர்ந்து வாழ்வான்.'
'ஆயுள்'
'64'
'மரணத்திற்கு காரணம்.'
'முதன்முதல் அவனுக்கென்று பிறந்த பெண்ணிடம் காதலை சொன்னான். அவள் பதில் சொல்லும் முன், அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டான்.'
'மரணித்த வயது'
'8'

3 comments:

ராமகுமரன் said...

nanba, alaipayuthe,12b pola thoguthu kadhai vazhangiyirupadhu nalla muyarchi, aanal yen cinemakaalil kanbipadhai pola ariyada ilamvayadhil kadhal,proposal endru ellam solgirai, kuraindadhu oru 13+ vayadhu endru sonnal nandraga irukum

Aruna said...

புதுமையாக எழுதிருக்கீங்க!
உங்க profile photo மாற்றக் கூடாதா? என்னவோ கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!
அன்புடன் அருணா

nelliyan said...

Different taa try panni irukka. But, konjam over raa irukkey?? :-)
Also, some parts of the story are not very clear. I hope you can write this in a more detailed way.