Friday, May 11, 2007

கவிதை எழுதிய கவிதை.

காதல் தந்த எனக்கு,
கவிதை தா என்றேன் நான்.

'கவிஞனுக்கே கவிதையா??
இந்தா வைச்சுக்கோ..'
என்று எழுத ஆரம்பித்தாய்.

கண்களை மூடி ஒரு அழகிய
மௌனக்கவிதை எழுதினாய் !!

பேனா பின்னாலிருந்த மூடி கடித்து,
கவிதை எழுதினாய் !!

உதடு கடித்து அழகாய்,
உதட்டு கவிதை எழுதினாய் !!

'முடியலைடா' என்று சிணுங்கி,
முழுக்கவிதை எழுதி முடித்தாய் !!

No comments: