மணிக்கணக்கில் மன்றாடினாலும்,
மறுத்து பேசா என் அருமை,
மடி கணினியே !!!

தனக்கென்று ஆசையில்லாமல்,
தனக்கென்று வாழாமல்,
தவப்புதல்வன் எனக்காக,
தரிசாவதில் நீ என்
தாய்க்கு நிகரே !!!
கண்ட நேரத்தில் 'Hang' ஆகி,
கலவரப்படுத்தி ரசிப்பதில்,
கண்டவன் 'Hack' பண்ணி,
கடத்தி விடுவானோ என்று அச்சுறுத்துவதில்,
காதலி நீ !!!
சில நேரம் ஆறுதல் என்ற பெயரில்,
சில 'Updates' கொடுத்து
சில நேரம் 'Advice' என்ற பெயரில்,
சில 'Recommendation' கொடுக்கும்,
சினேகதி நீ !!!
ஆண் விரும்பும்
அத்தனை அழகு இருந்தும்
அடக்கமாய்,
அகங்காரம் இல்லாமல் இருப்பதில்,
அழகி நீ !!!
2 comments:
முதல் தேர்ந்த கவிதை.. இன்னும் உவமை தொடர்புகளை அதிகரிக்கவும்
Good one. You can add more points and make it more attractive.
Post a Comment