Friday, September 28, 2007

நட்புத்திருநாள்.

நண்பா !

என்னுள் வளர்ந்து,
என்னை காப்பான்,
என்ற எதிர்பார்ப்பில்,
என்னை வளர்த்தாள் என் அன்னை !

உயிர் போனபின்,
உடலுக்கு கொள்ளி வைக்க,
உலகில் சுதந்திரத்தை பறித்து,
உலவ விட்டார் என் தந்தை !

பகைவர்களை அழிக்க,
பாண்டவர்களை ஒழிக்க, கர்ணனை
பக்கத்தில் வைத்து நட்பு
பாராட்டினான் துரியோதனன் !

எல்லோரிடமும் இருந்த
எதிர்ப்பார்ப்பு சிறிதும் இன்றி,
என்னை ஏற்றுக்கொண்ட நீ,
என் உயிரினும் மேலானவன்... !

பி.கு.
"நம் நட்பைப்பற்றி கவிதை எழுதி இருக்கிறேன்." என்ற சொன்னவுடன், ஈஸ்D போன் போட்டு கேட்ட என் உயிர் நண்பனுக்கு இது சமர்ப்பணம்.

No comments: